5354.

'வேறு இனிவிளம்ப உளதன்று; விதியால், இப்
பேறு பெற,என்கண் அருள் தந்தருளு; பின் போய்
ஆறு துயர்; அம்சொல் இள வஞ்சி ! அடியேன்
                                     தோள்
ஏறு, கடிது,'என்று, தொழுது இன் அடி பணிந்தான்.

     அம் சொல்இளவஞ்சி ! - அழகிய சொற்களைப்பேசும் இளங்கொடி
போல்வாய் ! இனி - இப்போது; விளம்ப -கூறுவதற்கு; வேறு உளது அன்று
-
வேறுமொழிகள் இல்லை; இப்பேறு - இந்தப் பாக்கியத்தை; விதியால் பெற
-
முறைப்படி அடியேன் பெறுவதற்கு; என்கண் - அடியேன்பால்; அருள்
தந்தருளு -
திருவருளை வழங்கியருள்; பின் - அதற்குப்பின்; போய் -
இராமபிரான் பக்கலில் போய்; துயர் ஆறு - துன்பத்தைத் தணிப்பாயாக.
(அதன் பொருட்டு); அடியேன் தோள் கடிது ஏறு - அடியேனுடைய
தோளில் விரைந்து ஆரோகணிப்பாயாக; என்று  தொழுது - என்று கூறிப்
பணிந்து; இன் அடி - நன்மைதரும் திருவடிகளை; பணிந்தான் -
வணங்கினான்.

     இன்அடி - நன்மைதரும் திருவடி. 'இனிய சிந்தை இராமன்' (கம்ப.
3061) 'சிந்திப்பவர்க்கு ..... செந்தேன் முந்திப் பொழிவன... அடித்தலம்' என்று
அப்பர் பேசுவர். அதை ஒட்டி இனியதிருவடி என்றும் பொருள் கொள்ளலாம்.
விதி - முறை.                                             (10)