5357.

'வேலையின்னிடையே வந்து, வெய்யவர்,
கோலி, நின்னொடும் வெஞ் சரம் கோத்தபோது,
ஆலம்அன்னவர்க்கு அல்லை, எற்கு அல்லையால்;
சாலவும் தடுமாறும்; தனிமையோய் !

(அனுமனே !) (நீஎன்னைச் சுமந்து போகும் போது)

      வெய்யவர் -கொடிய அரக்கர்கள்; வேலையின் இடையே வந்து -
கடலுக்கு நடுவே வந்து; கோலி - உன்னை வளைத்துக் கொண்டு;
நின்னொடும் - உன்னுடன்; வெம்சரம் கோத்தபோது - கொடிய அம்புகளை
வில்லில் தொடுத்துப் போர் புரியும்போது; ஆலம் அன்னவர்க்கு அல்லை -
விடம் போன்றவர்களுடன் போர் புரிவதற்கும் ஏற்றவனாகாய்; எற்கு அல்லை
-
என்னைப் பாதுகாப்பதற்கும் உரியவனாகாய்; சாலவும் - மிகவும்; தடுமாறும்
-
(எதைச் செய்வது எதைத்தவிர்ப்பது என்று) சஞ்சலம் அடையும்;
தனிமையோய் - தனிமை உடையவனாவாய்.

     அரக்கருடன்போர் செய்தால் என்னைப் பாதுகாக்க இயலாது. என்னைப்
பாதுகாத்தால் அரக்கர்களால் பேரிடர் உண்டாகும். ஆகையால் உன் எண்ணம்
முறையன்று என்று பிராட்டி பேசினாள்.
 'அத்தலைக்குஅல்லேன்... இத்தலைக்கு
அல்லேன்' (கம்ப. 8213) என்று வீடணன் புலம்பியது நினைவுக்கு வரும். கோலி
- வளைத்து அல் - அசை.                                   (13)