அனுமன் சீதையைத்தேற்றல்

5383.

இத் திறம்அனையவள் இயம்ப, 'இன்னமும்,
தத்துறல்ஒழிந்திலை, தையல் நீ !' எனா,
எத்திறத்துஏதுவும் இயைந்த இன் உரை,
ஒத்தன, தெரிவுறஉணர்த்தினான் அரோ;

     அனையவள் -அங்ஙனம்நொந்த பிராட்டி; இத்திறம் - இப்படி
(கலங்கி); இயம்ப - பலபடியாகப் பேச; (அனுமன்) பிராட்டியை நோக்கி)
தையல் - அம்மையே; நீ - நீ; இன்னமும் - இன்னும்கூட;  தத்துறல்
ஒழித்திலை - 
கலங்குதலை விட்டாயில்லை; எனா - என்று முன்னுரை பேசி;
எத்திறத்தும் - காரணங்களும் (காரியங்களும்); இயைந்த -
அமைந்துள்ளனவும்; ஒத்தன - அறிவு ஒவ்வக் கூடியனவும் ஆன; இன்உரை
-
இனிய மொழியை; தெரிவுற - மனம் தெளிவு அடையும்படி;
உணர்த்தினான் - உணரும்படி கூறினான்;

     இன்உரைஉணர்த்தினான். எத்திறத்து ஏதுவும் இயைந்த, ஒத்தன,
இன்உரை, என்று கூட்டுக. எத்திறத்தும் என்பது எத்திறத்து என்று வந்துள்ளது.
உம்மைத் தொகை - அரோ - அசை. இவ்விருத்தம் விளம் - விளம் - மா -
கூவிளம் என்னும் சீர்களைப் பெற்றுவரும். இந்நூலில் 2177 முறை
இவ்விருத்தம் காட்சிதருகிறது.                                (39)