5391. | 'கெட்டேன்! நீ உயிர் கேதத்தால் விட்டாய்என்றிடின், வெவ் அம்பால், ஒட்டாரோடு, உலகுஓர் ஏழும் சுட்டாலும்,தொலையா அன்றோ ? |
கேதத்தால் -பிரிவாகிய துக்கத்தாலே; நீ உயிர் விட்டாய் என்றிடில் -நீ உயிரை விட்டாய் என்றால்; கெட்டேன் - யான் அழிந்தேன் (பிறகு); வெவ்அம்பால் - கொடிய அம்பினாலே; ஒட்டாரோடு - பகைவர்களாகிய அரக்கர்களுடன்; ஓர் ஏழு உலகும் - ஒப்பற்ற ஏழு உலகங்களையும்; சுட்டாலும் - சுட்டு எரித்தாலும்; தொலையாது அன்றோ - பழி நீங்காதல்லவா; கேதம் -துக்கம். 'கேதம் கெடுத்து என்னை ஆண்டருளும்' (திருவாசகம் 595) ஒட்டார் - பகைவர் கெட்டேன் - இரக்கத்தையும் அச்சத்தையும் உணர்த்தும் சொல். இன்று, தொலைந்தேன், செத்தேன் என்று பேசப்படுவது போன்றது. (47) |