5410. | 'ஈண்டு, ஒரு திங்கள், இவ் இடரி்ன் வைகுதல் வேண்டுவது அன்று;யான், விரைவின் வீரனைக் காண்டலே குறை;பினும் காலம் வேண்டுமோ ? ஆண்தகை இனிஒருபொழுதும் ஆற்றுமோ ? |
(தாயே) நீ - நீ; ஈண்டு -இந்த இலங்கையில்; ஒரு திங்கள் - ஒரு மாதம்; இடரின் - துன்பத்தி்லே; வைகுதல் வேண்டுவது அன்று - தங்கியிருக்க வேண்டாம்; யான் - நான்; விரைவி்ன் - வேகமாக; வீரனைக் காண்டலே - இராமபிரானைப் பார்ப்பதுதான்; குறை - எஞ்சியுள்ள செயல்; பி(ன்)னும் - கண்ட பிறகும்; காலம் வேண்டுமோ - இங்கு வர நல்லகாலம் பார்ப்பானோ ?; ஆண்டகை - ஆடவருள் சிறந்த பெருமான்;இனி - இனிமேல்; ஒரு பொழுதும் - ஒரு கண நேரமும்; ஆற்றுமோ - பொறுத்திருப்பானோ (பொறான்); கேட்காததே குறை.கேட்டால் யாவும் வழங்குவான் என்று நாட்டுப்புறத்தில் பேசப்படுவதைக் கேள்விப்படாதவர் யாவர். அங்குள்ள குறை இங்கு நினைக்கவும். குறை - எஞ்சியிருப்பது. காலம் வேண்டுதல் - நல்ல காலத்தை அவாவிச் சும்மா இருத்தல். வள்ளுவர் காலம் கருதி இருத்தல் என்பர். இராமன், பிராட்டி நிலை கேள்வியுற்றதும் விரைந்து வருவான்; காலம் பாரான் என்று அனுமன் குறித்தனன். காலத் தாழ்ச்சியை மக்கள் 'மேஷ ரிஷபம்' பார்த்தல் என்பர் ஆண்டகை - ஆடவருள் தகுதி வாய்ந்தவன். வடநூலார் புருஷோத்தமன் என்பர். நம்பி என்பதும் அது. (66) |