5412.

'சோகம்வந்து உறுவது, தெளிவு தோய்ந்து
                             அன்றோ ?
மேகம் வந்துஇடித்து உரும்ஏறு வீழ்கினும்,
ஆகமும் புயங்களும்அழுந்த, ஐந் தலை
நாகம் வந்துஅடர்ப்பினும், உணர்வு நாறுமோ ?

(இராமபிரானுக்கு)

     சோகம் வந்துஉறுவது - உள்ளம் சோர்வு அடைவது; தெளிவு
தோய்ந்து அன்றோ -
அது தெளிவை அடைந்தால் அல்லவா; மேகம் -
மேகமானது; வந்து - அணுகி; இடித்து - இடியிடித்து; உரும் ஏறு -
பேரிடியை; வீழ்க்கினும் - வீழச் செய்தாலும்; ஆகமும் புயங்களும் -
உடம்பும் தோள்களும்; அழுந்த - வாட்டம் அடைய; ஐந்தலை நாகம் -
ஐந்து தலையைப் பெற்ற நாகம்; வந்து - அணுகி; அடர்ப்பினும் -
தாக்கினாலும்; உணர்வு நாறுமோ - (பெருமானுக்கு) உணர்ச்சி உண்டாகுமா.

     பெருமான், தன்நினைவற்றுக்கிடப்பதால் சோகம் வருத்தாது என்க.
இடிக்கும் நஞ்சுக்கும் எட்டாத நிலையில் பெருமான் உள்ளான். பெருமான் ஒரு
நாளாகிலும் தெளிந்திருந்தால் அல்லவா சோகத்தை அறியப் போகிறான்
என்பது பழைய உரை (அடை - பதி) மேகம் வந்து உரும் ஏறு வீழினும்
என்னும் பாடத்திற்கு மேகத்திலிருந்து வெளிப்பட்டு இடி வீழ்ந்தாலும் என்று
பொருள் கொள்ள வேண்டும். உரும் ஏறு எழுவாய். வீழ்க்கினும் என்னும்
பாடத்திற்கு மேகம் எழுவாய். நாறுதல் - தோன்றுதல். அறங்கள் நாறும்
மேனியார் (வாலிவதை.3)                                      (68)