5434. | 'இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால், அப் பெரிய பூசல்செவி சார்தலும், அரக்கர் வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால், துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல், இது சூதால். |
இப்பொழிலினைக்கடிது இறுக்குவென் - இந்தச் சோலையை விரைவில் முறித்து அழிப்பேன்; இறுத்தால் - அவ்வாறு யான் அழித்தால்; அப்பெரிய பூசல் செவி சார்தலும் - அந்தப் பெரிய ஆரவாரம் தமது காதில்பட்டவுடன்; அரக்கர் வெப்பு உறு சினத்தர் - அரக்கர்கள் கொடுமைமிக்ககோபத்தினராகி; எதிர் மேல் வருவர் - என்மேல் எதிர்த்துப் போர் புரியவருவார்கள்; வந்தால் - அவ்வாறு வந்தால்;துப்பு உற முருக்கி உயிர் உண்பல் - எனது வலிமையைக் கொண்டு அவர்களை அழித்து, உயிர்களை வாங்குவேன்; இது சூது - இதுவே யான் செய்யத்தக்க உபாயம். அரக்கரைப்போருக்கு அழைக்கும் உபாயத்தை உறுதிப் படுத்திக் கொண்டான் அனுமன். சூது - உபாயம். 'சூது என்று கனவும் சூதும் செய்யாதே ! திருவாய்மொழி (2.10.10) துப்பு - வலிமை; 'துப்புடையாரை' - பெரியாழ்வார் திருமொழி (423) (6) |