5448.

எண் இல்தரு கோடிகள் எறிந்தன செறிந்தே,
தண்ணென்மழைபோல் இடை தழைந்தது;
சலத்தால்,
அண்ணல் அனுமான்,'அடல் இராவணனது, அந்
                                      நாள்,
விண்ணினும் ஓர்சோலை உளது ஆம்' என,
                                  விதித்தான்.

     அந் நாள்எறிந்தன - அந்த காலத்தில்,(தான்) பிடுங்கி
எறிந்தனவான;எண் இல் தரு கோடிகள் செறிந்து - அளவிறந்த
மரங்களின் கூட்டங்கள்நெருங்கி; தண்ணென் மழை போல் - குளிர்ந்த
மேகம் போல; இடைதழைந்தது - விண்ணிடத்தில் தழைந்து தோன்றியது;
(அதனால்) அண்ணல்அனுமான் - பெருமை பொருந்திய அனுமான்;
சலத்தால் -
கோபத்தால்;அடல் இராவணனது - வலிமை மிக்க
இராவணனுடைய; ஓர் சோலை -அசோகவனச் சோலை; விண்ணினும்
உளது ஆம் என விதித்தான் -
வானத்தும் உள்ளது என்று சொல்லும் படிச்
செய்தான்.

     கோடி - கூட்டம்:'சீவகோடிகள்' என்பது போல. இராவணனுக்கு
வானத்திலும் ஒரு சோலை இருக்கிறது என எண்ணும்படியாக அசோகவனத்து
மரங்களை அனுமன் விண்ணிலே சிதறி எறிந்தான் என்பது கருத்து.     (20)