5453.

வேங்கைசெற்று, மராமரம் வேர் பறித்து,
ஓங்கு கற்பகம்பூவொடு ஒடித்து உராய்,
பாங்கர்சண்பகப் பத்தி பறித்து, அயல்
மாங்கனிப் பணைமட்டித்து மாற்றியே;

     வேங்கை செற்று -வேங்கைமரங்களை அழித்து; மரா மரம்
வேர்பறித்து -
ஆச்சாமரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து; ஓங்கு கற்பகம்
பூவொடு ஒடித்து -
உயர்ந்த கற்பக மரங்களை மலர்களுடன் முறித்து;
பாங்கர் உராய் சண்பகம் பத்தி பறித்து - பக்கங்களில் உராய்ந்து
கொண்டிருந்த சண்பக மரங்களின் வரிசைகளைப் பறித்து எறிந்து; அயல்
மாங்கனிப் பணை மட்டித்து மாற்றி -
பக்கத்தில் உள்ள மாம்பழங்கள்
நிறைந்த கிளைகளை முறித்து நிலை மாறச் செய்து.

     கற்பக மரங்கள்தெய்வத்தன்மை வாய்ந்தன. அதனால் அவைகள்
அழியவில்லை; நிலை மாறின.                                (25)