அனுமன்சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் வீசுதல்

5481.

'வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன்,
                             வேரோடு
அள்ளினன்'என்னக் கேட்டான்;
அத் தொழிற்கு
                             இழிவு தோன்ற,
புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான்
                             போல,
வள் உகிர்த்தடக் கைதன்னால் மண்நின்றும்
                             வாங்கி, அண்ணல்,

     அண்ணல் -பெரியோனான அனுமன்; வெம் தொழில் அரக்கன் -
கொடிய தொழிலை மேற் கொண்ட அரக்கனாகிய இராவணன்; பண்டு,
வெள்ளி அம் கிரியை வேரோடு அள்ளினன் என்ன கேட்டான் -
முற்காலத்தில், வெள்ளி மலையாகிய அழகிய கைலாசத்தை வேரோடு பறித்
தெடுத்தான் என்று, (உலகோர் சொல்லக்) கேட்டவனாய்; அத் தொழிற்கு
இழிவு தோன்ற -
அந்தச் செயலுக்குக் குறைவு உண்டாகுமாறு; புள்ளி
மாமேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல -
பல நிறம் கொண்ட
பெரிய மேரு எனப்படும் பொன் மலையை எடுப்பவன் போல; வள் உகிர்
தடக்கை தன்னால் -
கூர்மையான நகங்களை உடைய தனது
 பெரிய
கைகளால்;மண் நின்றும் வாங்கி - தரையிலிருந்தும் (அந்தச் சயித்தத்தை -
மண்டபத்தை) எளிதாகப் பெயர்த்தெடுத்து,

     இதுவும் அடுத்தகவியும் குளகமாகும்.                      (53)