5502.

வாள் உறைவிதிர்க்கின்றாரும், வாயினை
                          மடிக்கின்றாரும்,
தோள் உறத்தட்டிக் கல்லைத் துகள்படத்
                          துகைக்கின்றாரும்,
தாள் பெயர்த்துஇடம் பெறாது தருக்கினர்
                          நெருக்குவாரும்,
கோள் வளை எயிறுதின்று தீ எனக்
                          கொதிக்கின்றாரும்,

     வாள் உறைவிதிர்க் கின்றாரும் - வாளை உறையினின்றும்எடுத்து
அசைக்கின்றவர்களும்; வாயினை மடிக்கின்றாரும் - (கோபத்தால்) தம்
வாயிதழ்களை மடிக்கின்றவர்களும்; தோள் உற தட்டி - (தம்
வீரத்தைக்காட்ட, கைகளால்) தோள்களை நன்றாகத் தட்டிக் கொண்டு;
கல்லை துகள் படத் துகைக்கின்றாரும் -
(வழியிற் பட்ட)
பெருங்கற்களையும் தூளாகப் போகும்படி நொறுக்குகின்றவர்களும்; தாள்
பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் -
தம் கால்களை
(நடக்க) பெயர்த்து மேலே அடி வைப்பதற்கு இடம் கிடைக்காமல்
செருக்குகின்றவர்களும்; கோள் வளை எயிறு - வலிய வளைவான தம்
பற்களைக்; தின்று தீ எனக் - கடித்து நெருப்பை போலக்; கொதிக்கின்றாரும்- கொதித்து எழுகின்றவர்களும் (ஆயினர்).        (14)