5509. | 'இத இயல்இது' என, முந்தே இயைவுற இனிது தெரிந்தான்; பத இயல் அறிவுபயந்தால், அதின் நல பயன் உளது உண்டோ ? சிதவு இயல் கடிபொழில் ஒன்றே சிதறிய செயல் தரு திண் போர் உதவு இயல்இனிதின் உவந்தான்,-எவரின் அதிகம் உயர்ந்தான். |
எவரினும் அதிகம்உயர்ந்தான் - யாவரினும் மிகவும்சிறந்த அனுமன்;முந்தே - முதலில்; இது இதம் இயல் - தான், இந்த அசோகவனத்தைஅழித்தது நல்ல செயல் என்று; இயைவுற இனிது தெரிந்தான் -பொருத்தமாக நன்கு அறிந்து கொண்டான்; பதம் இயல் அறிவு பயந்தால் -பக்குவமுடைய அறிவு தோன்றினால்; அதின் நல பயன் உளது உண்டோ -அதைக் காட்டிலும் நல்லதான பயன் தரத்தக்கது வேறு உண்டோ ?(இல்லையென்றபடி); கடிபொழில் சிதைவு இயல் ஒன்றே - காவலுள்ளஅசோக வனத்தை அழித்ததான செய்கை ஒன்று மட்டுமே; சிதறிய செயல்தரு திண்போர் உதவு இயல் - (அரக்கர்) தோற்றோடுகின்ற செயலைஉண்டாக்கக் கூடிய வலிய போரை உதவி நின்ற தன்மைகண்டு; இனிதின்உவந்தான் - பெரிதும் மகிழ் வெய்தினான். முதலடியில் கூறப்பெற்ற செய்திக்கு இரண்டாம் அடி காரணமாய் அமைந்துள்ளது. வேற்றுப் பொருள் வைப்பணி. (21) |