அரக்கர், படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால்எதிர்த்தல் 5510. | 'இவன் ! இவன் ! இவன் !' என நின்றார்; 'இது !' என, முதலி எதிர்ந்தார்;- பவனனின் முடுகிநடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்- புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும், உடன் போர்த் துவனியில் அதிர,விடம்போல் சுடர் விடு படைகள் துரந்தார். |
பவனனின் முடுகி்நடந்தார் - காற்றை விட விரைவாகநடந்து வந்த அரக்கர்கள்; பகல் இரவு உறமிடை கின்றார் - பகற்காலத்திலேயே இரவு போல இருளாகும் படி நெருங்கி; இவன் இவன் இவன் என நின்றார் - இவன்தான் இவன்தான் இவன் என்று குறிப்பித்துக் காட்டுபவர்களாய்; இது என முதலி எதிர்ந்தார் - இதுவே அந்தக் குரங்கு என்று சொல்லி, முற்பட்டு எதிர்ப்பவர்களாகி; புவனியும் மலையும் விசும்பும் பொருவரு நகரும் - பூமியும் மலையும், ஆகாயமும், ஒப்பில்லாத இலங்கை நகரமும்; உடன் போர்த் துவனியில் அதிர - ஒரு சேரப் போர் முழக்கத்தினால் நடுங்கும் படியாக; விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் - ஆலகாலம் போல்கொடுமையை உடைய ஒளி விடுகின்ற ஆயுதங்களை (அனுமன் மேல்) வீசினார்கள். முடுகி நடந்தார்,துரந்தார் என முடிந்தது. இவன் இவன் இவன் என்ற அடுக்கு, விரைவுப் பொருளையும் வெகுளிப் பொருளையும் தருவது. (22) |