5513. | பரு வரைபுரைவன வன் தோள், பனிமலை அருவி நெடுங் கால் சொரிவன பல என,மண் தோய் துறை பொரு குருதி சொரிந்தார்; ஒருவரை ஒருவர்தொடர்ந்தார்; உயர் தலை உடைய உருண்டார்- அரு வரை நெரியவிழும் பேர் அசனியும் அசைய அறைந்தான். |
அரு வரை நெரியவிழும் பேர் அசனி்யும் அசைய அறைந்தான் - (அனுமன்)பெரிய மலைகள் நெரிந்து தூளாகுமாறு, விழுகின்ற பெரிய இடிகளும், அவ்வோசையில் குலைந்து போக, அம் மரத்தைக் கொண்டு அரக்கர்களை ஓங்கி அடித்தான்; (அதனால்) பனிமலை அருவி நெடும் கால் பல சொரிவன என - குளிர்ந்த மலைகள் அருவியாக நீண்ட வாய்க்கால் பலவற்றைச் சொரிவன போல; பருவரைபுரைவன வன் தோள் - பெரிய மலை போல்வனவாகிய வலிய தோள்களினால்; மண்தோய் துறை பொரு குருதி சொரிந்தார் - மண்ணிலே விழும் படியாக ஆறு போல இரத்தத்தைக் கொட்டியவர்களாய்; ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் - ஒருத்தரை ஒருத்தர் பற்றிக் கொண்டு; உயர்தலை உடைய உருண்டார் - உயர்ந்த தமது தலைகள் உடைபட்டுப் போக உருண்டோடி அழிந்தனர். அரக்கர்தோள்களுக்குப் பெரிய மலைகளும், அவர்கள் தோள்களிலிருந்து சொரிந்த இரத்த வெள்ளங்களுக்கு மலைகளிலிருந்து வரும் அருவி நீர்க்கால்களும் உவமைகளாயின. (25) |