5517.

அயல்,அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை
                      அளகை அடைந்தார்;
வியல் இடம்மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய
                      மிடைந்தார்;
புயல் தொடுகடலின் விழுந்தார்; புடை புடை
                     சிதைவொடு சென்றார்,
உயர்வுறவிசையின் எறிந்தான்; உடலொடும் உலகு
                      துறந்தார்.

     அயல் அயல்மலையொடு அறைந்தான் - (அனுமன்
அவ்வரக்கர்களை) பக்கங்களில் உள்ள மலைகளில் ஓங்கி அடித்தான்; அடு
பகை அளகை அடைந்தார் -
(அதனால் சிலர்) கொல்லவல்ல பகைமை
உடைய அளகா பட்டணத்தை அடைந்தார்கள்; வியல் இடம் மறைய
விரிந்தார் -
(வேறு சிலர்) ஆகாயம் மறைந்து போகும்படி பரவினார்கள்;
மிசை உலகு அடைய மிடைந்தார் - (இன்னும் சிலர்) மேலுலகம் முழுவதும்
செறிந்து காணப்பட்டனர்; புடை புடை சிதைவொடு சென்றார் - சிலர், நாற்
புறங்களிலும் உடல் சிதைய ஓடினார்கள்; உயர்வுற விடையின் எறிந்தான் -
மற்றும் சிலரை மேலே போகுமாறு வேகமாக வீசினான்; உடலொடும் உலகு
துறந்தார் -
(அதனால் அவர்கள்) உடம்புகளுடன் இந்த உலகத்தை நீத்து
விண்ணுலகு எய்தினார்கள்.                                 (29)