கிங்கரர்மடிந்ததைக் காவலர் இராவணனுக்குத் தெரிவித்தல் 5543. | வந்தகிங்கரர் 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார்; நந்தவானத்துநாயகர் ஓடினர், நடுங்கி, பிந்து காலினர்,கையினர், பெரும் பயம் பிடரின் உந்த, ஆயிரம்பிணக் குவைமேல் விழுந்து உளைவார். |
வந்த கிங்கரர்- அனுமனுடன் போரிட வந்த கிங்கரர்களான அரக்கர்கள்; 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார் - இரண்டு மாத்திரைக்கால அளவில் இறந்தார்கள்; நந்தவானத்து நாயகர் ஓடினர் - (உடனே) நந்தவனத்துப் பாதுகாவலர் விரைந்து செல்பவராய்; நடுங்கி, பிந்து காலினர் கையினர் - நடுங்கிப் பின் வாங்குகின்ற கால் கை உடையவர்களாய்; பெரும் பயம் பிடரின் உந்த - மிக்க அச்சம் கழுத்தைப் பிடித்துத்தள்ள; ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து - ஆயிரக்கணக்கான பிணக்குவியலின் மேல் விழுந்து; உளைவார் - வருந்துவார். (55) |