5545.

'இறந்து நீங்கினரோ ? இன்று, என் ஆணையை
                                  இகழ்ந்து
துறந்துநீங்கினரோ ? அன்றி, வெஞ் சமர்
                                 தொலைந்தார்
மறந்துநீங்கினரோ ? என்கொல் வந்தது ?' என்று
                                 உரைத்தான்-
நிறம் செருக்குற,வாய்தொறும் நெருப்பு
                                உமிழ்கின்றான்.

     நிறம் செருக்குஉற வாய் தொறும் நெருப்பு உமிழ்கின்றான் -
மார்பைஅகந்தையால் நிமிர்த்த வண்ணம் பத்து வாய்களிலும் சினத்தீயைக்
கக்குபவனான இராவணன்; இன்று இறந்து நீங்கினரோ ? - (செய்தி சொல்ல
வந்த காவலர்களைப் பார்த்து) இன்று, எனது ஏவலை மேற்கொண்ட
கிங்கரர்கள் போரில் தமது உயிரைப் பலிகொடுத்து ஒழிந்தார்களோ ?; என்
ஆணையை இகழ்ந்து துறந்து நீங்கினரோ ? -
(அல்லது) நான் இட்ட
கட்டளையைக் கடந்தவராய் போர் செய்வதை விட்டுச் சென்றார்களோ; அன்றி
-
அதுவல்லாமல்; வெம்சமர் தொலைந்தார் - கொடிய போரில் தோல்வி
உற்றவராய்; மறந்து நீங்கினரோ ? - (அவமானம் தாங்காமல்) என்னையும்
மறந்து போய் விட்டார்களோ ?; என் கொல் வந்தது என்று உரைத்தான் -
நீங்கள் வந்த காரணம் என்ன ? என்று கேட்டான்.                (57)