5563.

அந் நெடுந்தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற,
பொன்  நெடுந்தேரில் போனான்-பொருப்பிடை
                         நெருப்பின் பொங்கி,
தன் நெடுங்கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம்
                          மார்பில்
மின்னிட,வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன்.

     வில் இடும்எயிற்று வீரன் - ஒளி வீசுகின்றகோரைப் பற்களை
உடைய வீரனான சம்புமாலி; அந் நெடுந்தானை சுற்ற - அவ்வாறான பெரிய
சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; அமரரை அச்சம் சுற்ற -
தேவர்களைப் பயம் சூழ்ந்து  கொள்ளவும்; தன் நெடுங் கண்கள் காந்த -
தன் பெரிய கண்கள் கோபத்தால் ஒளி வீசவும்; மார்பில் தாழ் பெரும் கவசம்மின்னிட வெயிலும் வீச - மார்பில் தங்கிய பெரிய கவசம்
ஒளிவி்ட்டுமின்னலிடம் தோன்றும் ஒளிபோன்று பிரகாசிக்கவும்; பொருப்பிடை
நெருப்பின் பொங்கி -
மலையிடையே உள்ள நெருப்பு போல சினங்கொண்டு;பொன் நெடும் தேரில் போனான் - பொன் மயமான பெரிய
தேரில் ஏறிச்சென்றான்.

     சம்புமாலியால்அனுமனுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயத்தால்,
அமரரை அச்சம் சுற்றியது. பொருப்பினிடையிலுள்ள நெருப்பு, தேரின்

நடுவில் சினம் கொண்டுதங்கியிருந்த சம்புமாலிக்கு உவமை ஆயிற்று. 'வீரன்,
தானை சுற்றத் தேரில் போனான்' என இயையும்.                  (14)