அவ் வழி,அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின் ஆர்த்தார்; செவ் வழிச்சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம் தெற்றி, வெவ் வழி குருதிவெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க, 'எவ் வழிச்சேறும்' என்றார்; தமர் உடம்பு இடறி வீழ்வார்.
அவ்வழி -அப்போது;அரக்கர் எல்லாம் - போருக்குச் சென்ற அரக்கர்கள் யாவரும்; அலை நெடும் கடலின் ஆர்த்தார் - அலைகளை உடைய பெரிய கடல் போல ஆரவாரித்து; பிணப் பெருங்குன்றம் தெற்றி - பெரிய பிணமலைகள் கிடந்து போகவொட்டாது தடுத்தலாலும்; வெவ் வழி குருதி வெள்ளம் புடைமிடைந்து உயர்ந்துவீங்க - வெம்மையுடனே பெருகுகின்ற இரத்தப் பெருக்கு(போகும் இடங்களி்ல் எல்லாம்) நெருங்கி மிக்குப் பெருகுவதாலும்; தமர்உடம்பு இடறி வீழ்வார் - தமது சுற்றத்தவர்களுடைய பிணங்களின் மேல்இடறி வீழ்கின்றவராய்; செவ் வழி சேறல் ஆற்றார் - (அனுமன் உள்ளஇடத்துக்கு) நேரான வழியில் செல்ல முடியாதவர்களாய்; எவ்வழிச் சேறும்என்றார் - எந்த வழியாகப் போய்ச் சேருவோம் என்று செல்லும் வழிதெரியாது திகைத்து நின்றார்கள்.