5573. | இருந்தனன்,எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான், திரிந்தனன்,புரிந்தனன், என நனி தெரியார்; விரிந்தவர்,குவிந்தவர், விலங்கினர், கலந்தார், பொருந்தினர்,நெருங்கினர், களம் படப் புடைத்தான். |
இருந்தனன்எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் - தோரணத்தில் மீது அமர்ந்திருந்த அனுமன், எழுந்து, கீழ் இறங்கி, நிமிர்ந்தவனாகி; என நனி தெரியார் - என்று நன்றாகத் தெரிந்து கொள்ளாதவராய்; விரிந்தவர் - பரவி நின்றவர்களும்; குவிந்தவர் - ஒருங்கு சேர்ந்திருந்தவர்களும்; விலங்கினர் கலந்தார் - விலகிச் சென்றவர்களும், ஒன்று படக் கலந்து கொண்டவர்களும்; பொருந்தினர் நெருங்கினர் - போர்க்களத்தில் பொருந்தியிருந்தவர்களும், நெருங்கி நின்றவர்களும்; களம்படப் புடைத்தான் - போர்க்களத்தில் அழிந்து போக, அந்த எழுவால் ஒரு சேர அடித்துக் கொன்றான். அனுமன் எப்படிச்செயல்படுகிறான் என்பதைக்கூட அரக்கரால் அறிய முடியவில்லை; அவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டான். என்ன நடக்கிறதுஎன்பதை அரக்கர் சேனை அறியுமுன்னே அனுமன் அவர்களை அழித்தான். இருந்தவன் (அனுமன்) எழுந்து, இழிந்து, உயர்ந்து, திரிந்து போர் செய்தான்; அவன் செயலை அறியாத அரக்க வீரர்களை எழுவால் அடித்துக் கொன்றான். இருந்தனன். வினையாலணையும் பெயர். எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் திரிந்தனன் - முற்றெச்சங்கள். (24) |