5580.

மூளையும்உதிரமும் முழங்கு இருங் குழம்பு ஆய்
மீள் இருங்குழைபட, கரி விழுந்து அழுந்த,
தாளொடும் தலைஉக, தட நெடுங் கிரிபோல்
தோளொடும்நிருதரை, வாளொடும்-துகைத்தான்.

     மூளையும் உதிரமும்- (அரக்கர்களது) மூளைகளும் இரத்தமும்;
முழங்கு இரும் குழம்பு ஆய் -
கொதிக்கின்ற பெரிய குழம்பு போலாகி; மீள்
இரும் குழை பட -
(கண்டவர் அஞ்சி) மீள்கின்ற மிக்க குழை சேறாய் விட;
கரி விழுந்து அழுந்த -
அச்சேற்றில் யானைகள் விழுந்து அழுந்தி இறந்து
போக; தாளொடும் தலை உக - கால்களும் தலைகளும் சிந்திவிழ; தட
நெடும் கிரி போல் நிருதரை - 
பெரிய நீண்ட மலைகளைப் போன்ற
அரக்கர்களை; தோளொடும் வாளொடும் துகைத்தான் - தோள்களோடும்,
(அவர் கையில் கொண்ட) வாளுடனும் (அனுமன் தனது கால்களால்) துகைத்து
அழித்தான்.                                                (31)