5604. | 'அன்றியும், உனக்கு ஆள் இன்மை தோன்றுமால், அரச ! வென்றி இல்லவர்மெல்லியோர்தமைச் செல விட்டாய்; நன்றி இன்றுஒன்று காண்டியேல், எமைச் செல நயத்தி' என்று, கைதொழுதுஇறைஞ்சினர்; அரக்கனும் இசைந்தான். |
அரச ! - அரசனே !; அன்றியும் - இவை அல்லாமலும்; உனக்கு ஆள் இன்மை தோன்றும் - உனக்கு ஏவற்பணி செய்யும் வீரர்கள் இல்லாமை விளங்கும்; வென்றி இல்லவர் மெல்லியோர் தமைச் செலவிட்டாய் - (முன்பெல்லாம்) வெற்றி பெறத் தகாதவர்களையும், வலிமையிற் குறைந்தவர்களையும் (அனுமன் மேல் போருக்குச்) செல்லும்படி ஏவினாய்; இன்று ஒன்று நன்றி காண்டியேல் - இன்று ஒரு நற்செயலை நீ காணவிரும்புவாயானால்; எமைச் செல நயத்தி என்று - எங்களைப் போருக்குச் செலுத்த விரும்புவாய் என்று சொல்லி; கை தொழுது இறைஞ்சினர் - (சேனாபதிகள்)கைகளால் கும்பிட்டு வணங்கினர்; அரக்கனும் இசைந்தான் - இராவணனும் அதற்கு உடன்பட்டான். தமக்கு முன்அனுமனோடு போர் செய்யச் சென்றோர் வலிமை குறைந்தவர்கள் என்றும் தாங்களே அனுமனை எதிர்த்த பொழுது வெல்ல வல்லவர்கள் என்றும் பஞ்சசேனாபதிகள் கூறுகின்றனர். (4) |