5606. | ஆனைமேல்முரசு அறைந்தனர் வள்ளுவர் அமைந்தார்; பேன வேலையின்புடை பரந்தது, பெருஞ் சேனை; சோனை மா மழைமுகில் எனப் போர்ப் பணை துவைத்த; மீன வான் இடுவில் எனப் படைக்கலம் மிடைந்த. |
வள்ளுவர்அமைந்தார் - பறையறைவோராக இருந்தவர்; ஆனைமேல் முரசு அறைந்தனர் - யானையின் மீது ஏறிப் போர் முரசை முழக்கினர்; பெரும் சேனை பேன வேலையில் - பெரிய அரக்கர் படைகள் நுரையை உடைய கடலைப் போல; புடை பரந்தது - எல்லாப் பக்கங்களிலும் பரவலாயிற்று; சோனை மா மழை முகில் என - விடாது பெரு மழை பொழிகின்ற மேகம் போல; போர்ப் பணை துவைத்த - போர் முரசங்கள் ஒலித்தன; மீன வான் இடு வில் என - நட்சத்திரங்கள் விளங்கும் ஆகாயத்தில் தோன்றும் வானவில்லைப் போல; படைக்கலம் மிடைந்த - போர்ப் படைக் கருவிகள் நெருங்கி விளங்கின. போர் முரசு ஒலிக்கு. மழை பொழியும் மேகமும், படைக்கலங்களுக்கு வான வில்லும் உவமைகள். பேனம் - நுரை பணை - முரசு. (6) |