5608.

விரவு பொற் கழல் விசித்தனர், வெரிந் உற்று
                            விளங்கச்
சரம் ஒடுக்கினபுட்டிலும் சாத்தினர், சமையக்
கருவி புக்கனர், அரக்கர்; மாப் பல்லணம் கலினப்
புரவி இட்ட;தேர் பூட்டின; பருமித்த பூட்கை.

     அரக்கர் -அந்தஇராக்கத வீரர்கள்; விரவு பொற் கழல் விசித்தனர்
-
(வீரத்துக்கு அடையாளமாகப்) பொருந்திய பொன்னால் செய்த வீரக்
கழல்களைக் காலில் கட்டி; சரம் ஒடுக்கின புட்டிலும் வெரிந் உற்று
விளங்கச் சாத்தினர் -
அம்புகளை உள்ளே கொண்ட அம்பறாத தூணியையும்முதுகிற் பொருந்தி விளங்க அணிந்து கொண்டு; சமையக் கருவி
புக்கனர் -
நன்றாக அமையும் படிக் கவசத்தையும் பூண்டனர்; பரவி
மாப்பல்லணம்கவின இட்ட -
குதிரைகள், சிறந்த சேணங்கள் அழகாக
விளங்கஅணியப்பட்டன; தேர் பூட்டின - தேர்கள் சித்தம் செய்யப் பட்டன;
பூட்கைபருமித்த - யானைகள் அலங்கரிக்கப்பட்டவை ஆயின.

     நால்வகைச்சேனைகளும் போர்க்குக் கோலம் செய்து விட்டமை இங்குக்
கூறப் பட்டது. கருவி - கவசம்; 'இளைஞரும் கருவி வீசினார்; (சீவக - 2214
உரை) பருமித்தல் - அலங்கரித்தல்; 'பல்கதிர் ஆரமும் பூணும் பருமித்து'
(சீவக 2113)                                               (8)