5609. | ஆறு செய்தனஆனையின் மதங்கள்; அவ் ஆற்றைச் சேறு செய்தனதேர்களின் சில்லி; அச் சேற்றை நீறு செய்தனபுரவியின் குரம்; மற்று அந் நீற்றை வீறு செய்தன,அப் பரிக் கலின மா விலாழி. |
ஆனையின்மதங்கள் ஆறு செய்தன - (போருக்குச் சென்ற) யானைகளின் மதப் பெருக்குகள் (சென்ற இடங்களில்) ஆறுகளை உண்டாக்கின; அவ் ஆற்றை - அந்த மதநீர் ஆற்றை; தேர்களின் சில்லி சேறு செய்தன - தேர்களின் சக்கரங்கள் (ஓடிச்) சேறாகக் குழப்பி விட்டன; அச் சேற்றை - அவ்வாறு உண்டாகிய சேற்றை; புரவியின் குரம் நீறு செய்தன - குதிரைகளின் குளம்புகள் மிதித்துப் புழுதியாகச் செய்தன; அந் நீற்றை - அந்தப் புழுதியை; அப் பரிக் கலின மா விலாழி - அந்தக் குதிரைகளின் கடிவாளம் பூண்ட வாயிலிருந்து வழிகின்ற நுரைகள்; வீறு செய்தன - வேறு வேறாய்ப் பிளவுபடச் செய்தன. வாய்நுரை - உயர்வு நவிற்சி; இவ்வருணனை பாக்களில் மிகுதி. (9) |