5611.

ஆழித்தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப்பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின்
                                 தொகைய,
ஊழிக் காற்றுஅன்ன புரவி; மற்று அவற்றினுக்கு
                                இரட்டி,
பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி.

     ஆழித் தேர்த்தொகை ஐம்பதினாயிரம் - சக்கரங்களைக் கொண்ட
தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம் என்னும் அளவினதாம்; சூழிப்
பூட்கைக்குத் தொகை அஃதே -
முகபடாம் அணிந்த யானைகளின்
தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; ஊழிக் காற்று அன்ன
புரவி -
யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச்
செல்கின்ற குதிரைகள்; அவற்று இரட்டியின் தொகைய - அந்தத்
தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பாழித்
தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி -
பெரிய
 தோள்களையும்,
சிறந்தஆயுதங்களையும் உடைய காலாட்படைப் பிரிவுகளின் கணக்கு;
அவற்றினுக்கு இரட்டி - அந்தக் குதிரைப் படைகளுக்கு இரு மடங்காகும்
(இரண்டு லட்சம்)

    பஞ்சசேனாபதியர் கொணர்ந்த நால்வகைப் படையின் எண்ணிக்கை
கூறியது. சூழி - யானைகளின் முகத்தில் அணியும் முகபடாம். பூட்கை -
யானை. பாழிதோள் - பெரியதோள்.                              (11)