5626. | அரக்கரதுஆற்றலும், அளவு இல் சேனையின் தருக்கும், அம்மாருதி தனிமைத் தன்மையும், பொருக்கெனநோக்கிய புரந்தராதியர், இரக்கமும்,அவலமும், துளக்கும், எய்தினார். |
அரக்கரதுஆற்றலும் - (அனுமனைச் சூழ்ந்துகொண்ட) பஞ்ச சேனாபதிகளின் வலிமையையும்; அளவு இல் சேனையின் தருக்கும் - அளவற்ற அந்தச் சேனையின் பெருமிதத்தையும்; அம்மாருதி தனிமைத் தன்மையும் - அந்த அனுமன் தனியாய் நிற்கும் நிலைமையையும்; பொருக்கென நோக்கிய புரந்தராதியர் - திடீரென்று பார்த்த இந்திரன் முதலிய தேவர்கள்; இரக்கமும், அவலமும் துளக்கும் எய்தினார் - (அனுமனிடத்துக்) கருணையும், துன்பமும் நடுக்கமும் (ஒருங்கே) அடைந்தனர். இந்திரன் முதலியதேவர்கள், பஞ்ச சேனாபதிகளின் ஆற்றலை நன்கு அறிந்தவர்கள். அதனால், சேனைகளின் நடுவில் தனித்து நிற்கும் அனுமனது நிலைக்கு, இரக்கமும் அவலமும் அடைந்தனர். (26) |