5627. | 'இற்றனர்அரக்கர் இப் பகலுளே' எனா, கற்று உணர்மாருதி களிக்கும் சிந்தையான், முற்றுறச் சுலாவியமுடிவு இல் தானையைச் சுற்றுற நோக்கி,தன் தோளை நோக்கினான். |
கற்று உணர்மாருதி - (பல நூல்களையும்) கற்றுத் தேர்ந்த அனுமான்; அரக்கர் இப் பகலுனே இற்றனர் எனா, களிக்கும் சிந்தையான் - இந்த அரக்கர்கள், இன்று ஒரு பகல் பொழுதுக்குள்ளே அழிவது உறுதி என்று எண்ணி மகிழ்கின்ற மனத்தினனாய்; முற்று உறச் சுலாவிய முடிவு இல் தானையை - (தன்னை) முழுவதும் சூழ்ந்து கொண்ட எல்லையற்ற அரக்கர்படைகளை; சுற்று உற நோக்கி - நான்கு பக்கத்திலும் நன்றாகப் பார்த்து; தன் தோளை நோக்கினான் - தனது தோள்களையும் பார்த்தான். (27) |