5630.

வீங்கியவீரனை வியந்து நோக்கிய
தீங்கு இயல்அரக்கரும், திருகினார் சினம்,
வாங்கியசிலையினர், வழங்கினார் படை;
ஏங்கியசங்குஇனம்;
இடித்த பேரியே !

     வீங்கிய வீரனை- (அவ்வாறு)  பெரு  வடிவு  கொண்ட  வீரனான
அனுமனை; வியந்து நோக்கிய - வியப்புடன் பார்த்த; தீங்கு இயல்
அரக்கரும் -
(பிறர்க்குத்) தீமை செய்தலையே தமக்கு இயல்பாகக் கொண்ட
அரக்கர்களும்; சினம் திருகினார் - கோபம் மிகுந்து; வாங்கிய சிலையினர்
-
வில்லை வளைத்து; படை வழங்கினார் - (அனுமன் மீது) அம்புகளைச்
செலுத்தினார்கள்; சங்கு இனம் ஏங்கிய - (அப்போது) சங்குகளின் கூட்டம்
ஒலி செய்தன; பேரி இடித்த - முரசங்கள் பேரொலி செய்தன.

     வீரர்கட்குஉற்சாகம் மிகுதற் பொருட்டு, சங்கம் முதலியன முழக்குதல்
மரபு.                                                     (30)