5630. | வீங்கியவீரனை வியந்து நோக்கிய தீங்கு இயல்அரக்கரும், திருகினார் சினம், வாங்கியசிலையினர், வழங்கினார் படை; ஏங்கியசங்குஇனம்;இடித்த பேரியே ! |
வீங்கிய வீரனை- (அவ்வாறு) பெரு வடிவு கொண்ட வீரனான அனுமனை; வியந்து நோக்கிய - வியப்புடன் பார்த்த; தீங்கு இயல் அரக்கரும் - (பிறர்க்குத்) தீமை செய்தலையே தமக்கு இயல்பாகக் கொண்ட அரக்கர்களும்; சினம் திருகினார் - கோபம் மிகுந்து; வாங்கிய சிலையினர் - வில்லை வளைத்து; படை வழங்கினார் - (அனுமன் மீது) அம்புகளைச் செலுத்தினார்கள்; சங்கு இனம் ஏங்கிய - (அப்போது) சங்குகளின் கூட்டம் ஒலி செய்தன; பேரி இடித்த - முரசங்கள் பேரொலி செய்தன. வீரர்கட்குஉற்சாகம் மிகுதற் பொருட்டு, சங்கம் முதலியன முழக்குதல் மரபு. (30) |