அனுமன் செய்தபோர் 

5632.

உற்று,உடன்று, அரக்கரும், உருத்து உடற்றினர்;
செற்றுறநெருக்கினர்; 'செருக்கும் சிந்தையர்
மற்றையர் வரும்பரிசு, இவரை, வல் விரைந்து
எற்றுவென்' என,எழு, அனுமன் ஏந்தினான்.

     அரக்கரும் -அந்தஅரக்கவீரர்களும்; செருக்கும் சிந்தையர் உற்று -அகந்தை கொண்ட மனத்தினராய் அனுமனை நெருங்கி; உடன்று, உருத்து
உடற்றினர் -
சினத்தால் மாறுபட்டு, கருஞ்சினம் மூண்டு விரைந்து
படைக்கலங்களைப், பரபரப்புடன் விட்டனர்; செற்று உற நெருக்கினர் -
இறந்து பட அனுமனைப் பல வழியாலும் தாக்கினர்; அனுமன் - (அப்போது)
அனுமான்; மற்றையர் வரும் பரிசு - 'மற்றுமுள்ள அரக்கரும் போர் செய்ய
வரும் விதமாக; இவரை வல் விரைந்து எற்றுவென்' என - இந்த
அரக்கர்களை அழிப்பேன்' என்று எண்ணி; எழு ஏந்தினான் - இரும்புத்
தூணைக் கையில் எடுத்துக் கொண்டான்.

     அரக்கர்களின்போர்ச் செயலும், அனுமனது வீரச் செயலும்
கூறப்பட்டது.                                              (32)