5633. | ஊக்கியபடைகளும், உருத்த வீரரும், தாக்கியபரிகளும், தடுத்த தேர்களும், மேக்கு உயர்கொடியுடை மேக மாலைபோல் நூக்கியகரிகளும், புரள நூக்கினான். |
ஊக்கியபடைகளும் - அரக்கர்கள் தன்மீது செலுத்திய ஆயுதங்களும்; உருத்த வீரரும் - கோபித்து வந்த வீரர்களும்; தாக்கிய பரிகளும் - வந்து மோதிய குதிரைகளும்; தடுத்த தேர்களும் - தன்னைத் தடுத்து நின்ற தேர்களும்; மேக்கு உயர் கொடி உடை - மேலே உயர்ந்த கொடிகளைக் கொண்ட; மேக மாலை போல் நூக்கிய கரிகளும் - மேகங்களின் வரிசை போன்றனவுமான (தன்மீது) செலுத்தப்பட்ட யானைகளும்; புரள நூக்கினான் - (மண் மீது விழுந்து) புரண்டழியும் படி (அனுமன் எழுவைக் கொண்டு) கொன்றான். அனுமன், தன்கையில் ஏந்திய எழுவைக்கொண்டு (இரும்புத் தூண்) எதிரிகளின் ஆயுதம் முதலியவற்றை அழித்தது பற்றிக் கூறப்பட்டது. (33) |