5868.. | ' "இங்கு ஒரு திங்களே இருப்பல் யான்" என, அம் கண்நாயகன்தனது ஆணை கூறிய மங்கையும் இன்உயிர் துறத்தல் வாய்மையால்- பொங்கு வெஞ்செருவிடைப் பொழுது போக்கினால். |
பொங்கு வெம்செருவிடை பொழுது போக்கினால் - மிகக் கொடிய போரிலே நான் தலையிட்டுக் காலத்தை இங்குக் கழித்துக்கொண்டிருந்தால்; இங்கு ஒரு திங்களே யான் இருப்பல் - 'இந்த இலங்கையில் இன்னும் ஒரு மாத கால அளவே நான் உயிர் வைத்துக் கொண்டிருப்பேன் என்று; அம் கண் நாயகன் தனது ஆணை கூறிய - அழகிய திருக்கண்களை உடைய தனது கணவனான இராமபிரான் மீது ஆணை வைத்துச் சொன்ன; மங்கையும் மன் உயிர்துறத்தல் வாய்மை ஆல் - சீதா பிராட்டியும், (தன்னை மீட்க இராமபிரான் வராமை கண்டு) தன்னிடம் பொருந்திய உயிரைத் துறந்து விடுதல் உறுதியாகும். 'தன் நாயகன்மேல் ஆணையிட்டுக் கூறியதால், பிராட்டி மன உயிர் துறத்தல் வாய்மையால், என்று அனுமன் நினைத்தான் என்க, (64) |