5635.

இரண்டுதேர் இரண்டு கைத்தலத்தும் ஏந்தி, வேறு
இரண்டு மால்யானை பட்டு உருள, எற்றுமால்;
இரண்டு மால்யானை கை இரண்டின் ஏந்தி, வேறு
இரண்டு பாலினும்வரும் பரியை எற்றுமால்.

     இரண்டு தேர்இரண்டு கைத் தலத்தும் ஏந்தி - இரண்டு தேர்களைத்தன்னிரு கைகளில் எடுத்து; வேறு இரண்டு மால் யானைபட்டு
உருளஎற்றும் -
(எதிர்வந்தது) வேறே இரண்டு பெரிய யானைகள் அழிந்து
உருளுமாறு தாக்கினான்; கை இரண்டின் இரண்டு மால் யானை ஏந்தி -
தன் இரு கைகளிலும் வேறு இரண்டு பெரியயானைகளை எடுத்து; இரண்டு
பாலினும் வேறு வரும் பரியை எற்றும் -
இரு பக்கங்களிலும் வேறு வந்த
குதிரைகளை மோதி அடித்தான்.

     தன்னை எதிர்க்கவந்த தேர்கள் முதலியவற்றைக் கொண்டே,
பகைவரின் யானைகள் முதலியவற்றை அழித்து ஒழித்தான் அனுமன்
என்பதாம்.                                             (35)