5636.

மா இரு நெடுவரை வாங்கி, மண்ணில் இட்டு,
ஆயிரம் தேர் படிஅரைக்குமால்; அழித்து,
ஆயிரம் களிற்றைஓர் மரத்தினால் அடித்து,
'ஏ' எனும்மாத்திரத்து எற்றி முற்றுமால்.

     மா இரு நெடுவரைவாங்கி - (மேலும் அனுமன்)பக்கத்தே உள்ள
மிகப் பெரிய மலையை எடுத்து; (அதனைக் கொண்டு) ஆயிரம் தேர் பட
மண்ணில் இட்டு அழித்து அரைக்கும் -
ஆயிரந் தேர்கள் அழியும்படி,
அவைகளைத் தரையில் வைத்து அரைப்பான்; ஏ எனும் மாத்திரத்து -
இரண்டு மாத்திரைப் பொழுதிற்குள்; ஓர் மரத்தினால் - ஒரு மரத்தைக்
கொண்டு; ஆயிரம் களிற்றை அடித்து எற்றி முற்றும் - ஆயிர யானைகளைஅடித்து (அவற்றை) மாயச் செய்வான்.

     'ஏ' யெனும் அளவுஇரண்டு, மாத்திரை நேரம்; கண் இமைக்கும் நேரம்
ஒரு மாத்திரை. 'ஏ' நெடிலெழுத்து; ஆகையால் இரண்டு மாத்திரை   (36)