5637.

உதைக்கும்வெங் கரிகளை; உழக்கும் தேர்களை;
மிதிக்கும் வன்புரவியை; தேய்க்கும் வீரரை;
மதிக்கும் வல்எழுவினால்; அரைக்கும் மண்ணிடை;
குதிக்கும் வன்தலையிடை; கடிக்கும்; குத்துமால்.

     உதைக்கும் வெம்கரிகளை - (பகைவர் தன் மீது)செலுத்துகின்ற
கொடிய யானைகளைக் காலில் உதைப்பான்; தேர்களை உழக்கும் -
தேர்களைக் கலக்குவான்; வன் புரவியை
 மிதிக்கும் - வலிய
குதிரைகளைக்காலால் மிதிப்பான்; வீரரைத் தேய்க்கும் -வீரர்களைத்
தரையோடு சேர்த்துத் தேய்த்து விடுவான்; வல் எழுவினால்
மண்ணிடை மதிக்கும் -
(தான் கையில் கொண்ட) வலிய எழுவால்
தரையிட்டுக் குழம்பாக்குவான்; வன் தலை இடைக் குதிக்கும் - (மேலும்)
அவ்வரக்கரின் தலையிடத்தே குதிப்பான்; கடிக்கும், குத்தும் - அவர்களைக்
கடிப்பான் குத்துவான்.

     எழு - ஒருவகைப்போர்க் கருவி. மதிற்கதவில் குறுக்கே இடப்படும்
கணையமரம் எனவும் கூறுவர். மதித்தல் - கடைவது போலக் குழப்புதல். (37)