5642.

வரிந்து உறவல்லிதின் சுற்றி, வாலினால்
விரிந்து உறவீசலின், கடலின் வீழ்குநர்
திரிந்தனர்-செறி கயிற்று அரவினால் திரி
அருந் திறல்மந்தரம் அனையர் ஆயினார்.

     வாலினால்வல்லிதின் உறச் சுற்ற வரிந்து - அனுமன் தனது
வாலினால் அழுத்தமாகச் சுற்றிக்கட்டி; விரிந்து உற வீசலின் - வெகு தூரம்
செல்லும்படி வீசியெறிதலினால்; கடலின் வீழ்குநர் திரிந்தனர் - கடலில்
போய் விழுந்து சுழல்கின்ற அரக்கவீரர்கள்; செறி கயிற்று அரவினால் திரி -
நெருங்கிய வாசுகி என்னும் (பாம்பு) கயிற்றினால் கடையப்பட்டுச் சுழன்ற;
அருந் திறல் மந்தரம் அனையர் ஆயினார் - அரிய வலிமை பெற்ற மந்தரமலையை ஒத்தவராயினர்.

      அரக்கர்களாகியகாலாட்படை அழிந்தமை கூறப்பட்டது. அரக்கர்கள்
மந்தர மலைக்கும் அனுமன்வால் வாசுகி என்னும் பாம்புக்கும் உவமை. (42)