படைகள் முழுமையாகஅழிதல் 5646. | முழு முதல்,கண்ணுதல், முருகன் தாதை, கைம் மழு எனப்பொலிந்து ஒளிர் வயிர வான் தனி எழுவினின்,பொலங் கழல் அரக்கர் ஈண்டிய குழுவினை, களம்படக் கொன்று நீக்கினான். |
முழு முதல்கண்ணுதல் முருகன் தாதை - மும் மூர்த்திகளில் சேர்ந்தவனாகிய, கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின் தந்தையாகிய சிவபிரானது; கை மழு என - கையில் ஏந்திய மழுவாயுதம் போல; பொலிந்து ஒளிர் - மிக்கு விளங்குகின்ற; வயிர வான் தனி எழு வினின் - உறுதியான் சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணினால்; பொலன் கழல் அரக்கர் ஈண்டிய குழு வினை - அழகிய வீரக்கழல் அணிந்த அரக்கருடைய நெருங்கிய கூட்டத்தை; களம் படக் கொன்று நீக்கினான் - போர்க் களத்தில் இறந்த விழுமாறு கொன்று தொலைத்தான். (46) |