5648.

ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் இழுக்க,
தேர்த் துணை ஆழிஅழுந்தினர், சென்றார்;
ஆர்த்தனர்;ஆயிரம் ஆயிரம் அம்பால்
தூர்த்தனர்;அஞ்சனை தோன்றலும் நின்றான்.

     ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் - (பிணக்குவியல்களை)இழுத்துக்
கொண்டு செல்கின்ற இரத்த வெள்ளத்தினிடையே உள்ள மணல் திட்டுகள்;
இழுக்க -
உள்ளே இழுப்பதனால்; தேர்த்துணை ஆழி அழுந்தினர்
சென்றார் -
தம் தேர்களின் சக்கரங்களும் புதையவும் அரிதின் சென்ற பஞ்ச
சேனாபதிகள்; ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர் - ஆயிரக்கணக்கான
அம்புகளால் (அனுமன் உடலை) மூடி மறைத்தனர்; அஞ்சனை தோன்றலும்
நின்றான் -
அஞ்சனா தேவியின் மகனாகிய அனுமனும் அம்புமாரியுள்
அஞ்சாது நின்றான்.                                          (48)