5649. | எய்த கடுங்கணை யாவையும், எய்தா நொய்துஅகலும்படி, கைகளின் நூறா, பொய்து அகடுஒன்று பொருந்தி, நெடுந் தேர் செய்த கடும்பொறி ஒன்று, சிதைத்தான். |
எய்த கடும்கணையாவையும் எய்தா - (அந்தப் பஞ்சசேனாபதிகள்) எய்த கொடிய அம்புகள் எல்லாம் தன்னை வந்து அடையாமல்; நொய்து அகலும்படி கைகளின் நூறா - எளிதில் ஒழிந்து போம்படி (தன்) கைகளினால் தூளாக்கிவிட்டு; நெடுந்தேர் - (பிறகு, பஞ்ச சேனாபதிகளுள் ஒருவனது) பெரிய தேரிலே; பொய்து - துளைக்கப்பட்டு; அகடு ஒன்று பொருந்தி செய்து - நடுவில் நாட்டப்பட்டதாகிப் பொருந்தி செய்திருந்த; கடும் பொறி ஒன்று சிதைத்தான் - விரைந்து செல்வதற்குரிய இயந்திரம் ஒன்றை அழித்தான். அந்தப் பஞ்சசேனாபதிகளை அழிக்கக் கருதிய அனுமன், அவர்களுள் ஒருவனது தேரின் விசையந்திரத்தைச் சிதைத்தான் என்பதாம். (49) |