5651.

முறிந்ததுமூரி வில்; அம் முறியேகொடு
எறிந்த அரக்கன், ஓர் வெற்பை எடுத்தான்;
அறிந்தமனத்தவன், அவ் எழுவே கொடு
எறிந்த அரக்கனைஇன் உயிர் உண்டான்.

     மூரிவில்முறிந்தது - (அந்த அரக்கனுடைய)வலிய வில் முறிந்து
போயிற்று; அம் முறியே கொடு - அந்த வில்லின் முறிந்த துண்டையே
கையில் கொண்டு; எறிந்த அரக்கன் - அனுமன் மீது வீசி எறிந்த அந்த
அரக்கன்; ஓர் வெற்பை எடுத்தான் - மீண்டும் ஒரு மலையை அனுமன் மீது
எறியத் தூக்கினான்; அறிந்த மனத்தவன் - அரக்கனின் கருத்தை அறிந்த
மனத்தவனாகிய அந்த அனுமன்; அவ் எழுவே கொடு - (தனது கையில்
கொண்டிருந்த) அந்த இரும்புத் தூணைக் கொண்டே; எறிந்த அரக்கனை -
தன்மீது வில் முறிகொண்டு எறிந்த அரக்கனுடைய; இன் உயிர் உண்டான் -
இனிய உயிரை அழித்தான்.

     அரக்கன் மலையைஎடுப்பது அறிந்து அதற்கு முன்னே அனுமன்
அவனை இரும்புத் தூணால் அடித்துக் கொன்றான் என்க. அரக்கனே
யாயினும் அவனுக்கு அவன் உயிர் இனியதுதானே; ஆகையால் அரக்கனது
உயிரை 'இன்னுயிர்' என்றார்.                                 (51)