5653. | ஆயிடைவீரனும், உள்ளம் அழன்றான்; மாய அரக்கர்வலத்தை உணர்ந்தான்; மீ எரி உய்ப்பதுஓர் கல் செலவிட்டான்; தீயவர் அச்சிலையைப் பொடிசெய்தார். |
ஆயிடை - அப்பொழுது;வீரனும் உள்ளம் அழன்றான் - வீரனான அனுமனும் மனம் கொதித்தவனாகி; மாய அரக்கர் வலத்தை உணர்ந்தான் - வஞ்சனையை உடைய அரக்கரது வலிமையை அறிந்து; மீ எரி உய்ப்பது ஓர் கல் செலவிட்டான் - மேலே நெருப்பை உமிழ்வதான ஒரு கற்பாறையை எடுத்து (அவர்கள் மீது) தாக்குமாறு வீசி எறிந்தான்; தீயவர் - தீயவர்களாகிய அந்த அரக்கர் நால்வரும்; அச்சிலையை பொடி செய்தார் - அந்த கற்பாறையை,(தங்கள் ஆயுதங்களால்) பொடியாக உதிரச் செய்தார்கள். எறியப்பட்டமலையின் வேகத்தால் அதிலிருந்து நெருப்புப் பொறி உண்டாயிற்று. (53) |