5657.

மூண்டசினத்தவர் மூவர் முனிந்தார்;
தூண்டிய தேரர்,சரங்கள் துரந்தார்;
வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார்,
'யாண்டு இனிஏகுதி ?' என்று, எதிர் சென்றார்.

     மூவர் மூண்டசினத்தவர் முனிந்தார் - மீதியிருந்த மூவர்மிகுந்த
கோபம் உள்ளவர்களாய் (அனுமனிடம்) வெறுப்புற்ற வராகி; தூண்டிய தேரர்
-
தமது தேர்களைச் செலுத்தியவர்களாய்; சரங்கள் துரந்தார் - (அனுமம்
மீது) அம்புகளைத் தொடுத்தனர்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார்
-
(அவர்கள் மேலும்) தாம் விரும்பிய கொடிய போரை வேறு விதங்களிலும்
செய்யத் தொடங்கியவராய்; யாண்டு இனி ஏகுதி ? - இனி நீ எங்குத் தப்பிப்
போவாய் ?; என்ற எதிர் சென்றார் - என்று சொல்லிக் கொண்டே அனுமன்
முன் எதிர்த்துச் சென்றார்கள்.                                 (57)