5669. | 'முக்கணான்ஊர்தி அன்றேல், மூன்று உலகு அடியின் தாயோன் ஒக்க ஊர் பறவைஅன்றேல், அவன் துயில் உரகம் அன்றேல், திக்கயம்அல்லதேல், புன் குரங்கின்மேல் சேறி போலாம் ! இக் கடன்அடியேற்கு ஈதி; இருத்தி ஈண்டு இனிதின்; எந்தாய் ! |
எந்தாய் -என்தந்தையே !; முக்கணான் ஊர்தி அன்றேல் - (நம்மோடு பொருவது) மூன்று கண்களை உடைய சிவபிரானது வாகனமாகிய இடபம் அன்றாயின்; மூன்று உலகு அடியில் தாயோன் - மூவுலகங்களையும் தன் ஈரடிகளால் தாவியளந் தவனாகிய திருமால்; ஒக்க ஊர் பறவை அன்றேல் - சிறப்பமைய ஊர்ந்து செல்லும் பறவையாகிய கருடன் அன்றாயின; அவன் துயில் உரகம் அன்றேல் - அத்திருமால் பள்ளி கொள்ளும் பாம்பாகிய ஆதிசேடன் அன்றாயின்; திக்கயம் அல்லதேல் - திக்குகளில் இருக்கும் யானைகளில் ஒன்றும் அன்றாயின்; புன்குரங்கின் மேல் சேறி போலாம் - அற்பக்குரங்கின் மீது போருக்குச் செல்கின்றாய் போலும் ! (நீ பொரச் செல்வது சிறிதும் தகுதியன்று); இக்கடன் அடியேற்கு ஈதி - இந்தக் கடமையை எனக்குத் தந்து; ஈண்டு இனிதின் இருத்தி - இ்ங்கு நீ (கவலையின்றி) இனிதாக இருப்பாயாக. இதுவும் அடுத்தபாடலும் குளகமாய், 'ஏவுதி என்னை என்றான்' என்பதோடு வினை முடிவு பெறும். 'நீ விலங்குகளோடு எதிர்த்துப் போர் புரிவது உனக்கு இழுக்கு; சிவபிரானின் இடபம், திருமாலின் கருடன், ஆதிசேடன், திக்கயம் இவற்றோடு போர் செய்தாலும் ஒருவாறு நேராகும். அற்பக் குரங்கோடு போர் செய்யச் செல்வது, உன் பெருமைக்கும் வலிமைக்கும் குறைவு' என்று கூறினான். (2) |