அக்ககுமாரன்போருக்குப் போதல் 

5673.

என, இவைஇயம்பி, 'ஈதி விடை' என, இறைஞ்சி
                          நின்ற
வனை கழல்வயிரத் திண் தோள் மைந்தனை
                         மகிழ்ந்து நோக்கி,
'துனை பரித்தேர்மேல் ஏறிச் சேறி' என்று, இனைய
                          சொன்னான்;
புனை மலர்த்தாரினானும், போர் அணி அணிந்து
                          போனான்.

     என இவை இயம்பி- என்றுஇச்சொற்களைக் கூறி; 'விடை ஈதி' என- அனுமதி எனக்கு அளிப்பாயாக என்று; இறைஞ்சி நின்ற - வணங்கித்
தன்முன் நிற்கின்ற; வனைகழல் வயிரத் திண்தோள் மைந்தனை - கட்டிய
வீரக்கழல்களையும் மிக வலிய தோள்களையும் உடைய அக்ககுமாரனை;
மகிழ்ந்துநோக்கி -
(இராவணன்) மகிழ்ச்சியோடு பார்த்து; துனை பரித்
தேர் மேல்ஏறிச் சேறி என்று -
'விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய
தேர் மீது ஏறிநீ போவாயாக' என்று; இனைய சொன்னான் - இவ்வாறாகச்
சொன்னான்;புனை மலர்த் தாரினானும் - அழகிய மலர்களால்
தொடுக்கப்பட்ட மாலையைஅணிந்துள்ள அக்ககுமாரனும்; போர் அணி
அணிந்து -
போர்க் கோலம்பூண்டு; போனான் - சென்றான்.

    எப்படியிருந்தாலும் குரங்கைப் பிடித்து வருவேன் என்று தன் மகன்
உறுதி கூறியதனால், இராவணன், அவனை மகிழ்ந்து நோக்கி, போர்க்களம்
செல்ல விடை கொடுத்தான். துனை - விரைவு; 'கழிவும் துனைவும் விரைவி்ன்
பொருள' (தொல். சொல். 315)                                   (6)