5674. | ஏறினன்என்ப மன்னோ, இந்திரன் இகலின் இட்ட, நூறொடு நூறு பூண்டநொறில் வயப் புரவி நோன் தேர்; கூறினர் அரக்கர்ஆசி; குமுறின முரசக் கொண்மூ; ஊறின உரவுத்தானை, ஊழி பேர் கடலை ஒப்ப. |
இந்திரன்இகலின் இட்ட - இந்திரன் போரில்தோற்றுக் கைவிட்டுப் போன; நொறில் வய - விரைவுள்ளனவும் வெற்றி தரக் கூடியனவுமான; நூறொடு நூறு புரவி - இரு நூறு குதிரைகள்; பூண்ட நோன் தேர் ஏறினன்- பூட்டப் பெற்ற வலிய தேரின் மீது ஏறினான்; அரக்கர் ஆசி கூறினர் -அரக்கர்கள் (அவனுக்கு) வாழ்த்துக் கூறினார்கள்; முரசக் கொண்மூ குமுறின- முரசங்களாகிய மேகங்கள் முழங்கின; ஊழி போர் கடலை ஒப்ப - யுகமுடிவுக் காலத்தில் நிலை பெயர்ந்து (பொங்கி) வரும் கடலைப் போல; உரவுத்தானை ஊறின - வலிய சேனைகள் மேன்மேலும் அதிகமாகத் தொடர்ந்தன. நொறில் -விரைவு; நோன் - வலிமை; கொண்மூ - மேகம். (7) |