5675.

பொரு கடல்மகரம் எண்ணில், எண்ணலாம் பூட்கை;
                                   பொங்கித்
திரிவன மீன்கள்எண்ணில் எண்ணலாம் செம்
                             பொன் திண்தேர்;
உரு உறு மணலைஎண்ணில், எண்ணலாம் உரவுத்
                             தானை;
வரு திரை மரபின்எண்ணில், எண்ணலாம் வாவும்
                             வாசி.

     பொருகடல் மகரம்எண்ணில் - அலைகள் மோதும்கடலில் உள்ள
சுறாமீன்களை எண்ணக் கூடுமானால்; பூட்கை எண்ணலாம் -
(அக்ககுமாரனுடன் போருக்குச் சென்ற) யானைகளை எண்ணிக் கணக்கிடலாம்;
பொங்கித் திரிவன மீன்கள் எண்ணில் -
(அந்தக் கடலில்) செருக்கித்
திரிவனவாகிய மீன்களை எண்ணமுடியுமானால்; செம்பொன்திண் தேர்
எண்ணலாம் -
செம்பொன்னாலான தேர்களை எண்ண முடியும்; உருஉறு
மணலை எண்ணில் -
அக்கடலில் தனித்தனியாகப் பிரித்து வைத்த மணலை
எண்ணக் கூடுமானால்; உரவுத் தானை எண்ணலாம் - வலிமை பொருந்திய
காலாள் சேனையை எண்ண முடியும்; மரபின் வரு திரை எண்ணில் - முறைமுறையாக வருகிற அலைகளை எண்ணக் கூடுமானால்; வாவும் வாசி
எண்ணலாம் -
தாவிச் செல்லும் குதிரைகளை எண்ண முடியும்.

     அக்ககுமாரனுடன்சென்ற நால்வகைப் படையின் மிகுதி
தெரிவிக்கப்பட்டது.                                         (8)