ஆறு-இரண்டு அடுத்த எண்ணின் ஆயிரம் குமரர், ஆவி வேறு இலாத்தோழர், வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர், ஏறிய தேரர்,சூழ்ந்தார்-இறுதியின் யாவும் உண்பான் சீறிய காலத்தீயின் செறி சுடர்ச் சிகைகள் அன்னார்.
இறுதியின் யாவும்உண்பான் - யுகமுடிவுக் காலத்தில்உலகப் பொருள்கள் அனைத்தையும் அழிக்கும் பொருட்டு; சீறிய காலத் தீயின் - பொங்கி எழுந்த ஊழித் தீயின்; செறி சுடர் சிகைகள் அன்னார் - நெருங்கியஒளியை உடைய நெருப்புச் சுடர்க் கொழுந்துகள் போன்றவர்களும்; ஆவிவேறு இலாத தோழர் - (அக்ககுமாரன் அன்றி) தமக்கு வேறு உயிர் இல்லாதநண்பர்களும்; வென்றி அரக்கர்தம் வேந்தர் மைந்தர் - வெற்றியை உடைய அரக்கர் குல அரசர்களின் புதல்வர்களுமாகிய; ஆறு இரண்டுஅடுத்த எண்ணின் ஆயிரம் குமரர் - பன்னீராயிரம் குமாரர்கள்; ஏறியதோர் சூழ்ந்தார் - தேர்களில் ஏறினவர்களாய் அக்ககுமாரனைச் சூழ்ந்துகொண்டார்கள். (9)