5687. | 'பழி இலதுஉரு என்றாலும், பல் தலை அரக்கன் அல்லன்; விழிகள்ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்; மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்; அழிவு இல் ஒண்குமரன் யாரோ, அஞ்சனக் குன்றம் அன்னான் ?' |
அஞ்சனக் குன்றம்அன்னான் - மைந் நீலமலை போலவிளங்குகின்றஇவன்; உருபழி இலது என்றாலும் - இவனுடைய வடிவம் குற்றம் அற்றதுஎன்றாலும்; பல் தலை அரக்கன் அல்லன் - பத்துத் தலைகளை உடையஅரக்கனாகிய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தைவென்றானும் அல்லன் - ஆயிரம் கண்களைக் கொண்ட தேவேந்திரனைவென்ற இந்திரசித்தும் அல்லன்; மொழியின் - ஆராய்ந்து கூறுமிடத்து; மற்றுஅவர்க்கு மேலான் - மற்றைய அவர்களுக்கும் (இராவணன் மேகநாதன்)மேம்பட்டவனாகத் தோன்றுகின்றான்; முரண் தொழில் முருகன் அல்லன் -போர்த் தொழிலிற் சிறந்த முருகக் கடவுளும் அல்லன்; அழிவு இல் குமரன்யாரோ ? - கேடு என்பதே இல்லாத பராக்கிரமமுடைய இக் குமரன் யாரோ?. அனுமன் முன்பேஇராவணனையும் இந்திரசித்தையும் பார்த்தவன் [ஊர்தேடு படலம் (4974. 5040 - 5052 காண்க] ஆதலால் வந்திருப்பவன் அவர்களில் ஒருவனல்லன் எனத் தெளிந்தான். போர்த்தொழில் வல்லமையும் வெல்லும் திறனும் உடைய சேவகப் பெருமாளாகிய முருகனை வீரர்க்கு உவமை சொல்வது மரபு; 'கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்' (பெரும்பாண் 75-76) எனவும், வென்றி நெடுவேள் (குறுந். 111) எனவும் வந்தன. அறநெறியில் செல்லாத அரக்கர் சார்பினனாக முருகன் வாரான் என்பதால் வருபவன் முருகன் அல்லன் எனத் தெளிந்தான். விழிகள் ஆயிரம் கொண்ட இந்திரனை வென்றவன் மேகநாதன்; இவ்வெற்றியால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான். இராவணனுக்கும் இந்திரசித்துக்கும் மேலான பெருவீரம் படைத்தவன் அக்ககுமாரன் எனப் பார்த்த அளவில் கணிக்கிறான் அனுமன். (20) |