அனுமனுக்கும்அக்ககுமாரனுக்கும் நிகழும் போர் 5698. | கொன்றான் உடன் வரு குழுவை; சிலர் பலர் குறைகின்றார், உடல் குலைகின்றார்; பின்றா நின்றனர்;உதிரப் பெரு நிதி பெருகாநின்றன;அருகு ஆரும் நின்றார்நின்றிலர்; தனி நின்றான், ஒரு நேமித்தேரொடும், அவன் நேரே சென்றான்; வன்திறல் அயில் வாய் அம்புகள் தெரிகின்றான்; விழி எரிகின்றான். |
உடன் வரு குழுவை -(தன்மேல் போருக்கு) திரண்டு வருகின்ற அரக்கர் திரளை; கொன்றான் - (அனுமன்) கொன்றான்; சிலர் குறைகின்றார் -சிலஅரக்க வீரர்கள் இறந்தொழிந்தார்கள்; பலர் உடல் குலைகின்றார் - மற்றும் பல அரக்கர்கள் உடல் நடுக்குற்றனராய்; பின்றா நின்றனர் - பின்னிட்டுச் சென்றவராயினர்; உதிரப் பெருநிதி பெருகாநின்றன - இரத்த பேராறுகள் பெருகத் தலைப்பட்டன; அருகு நின்றார்ஆரும் நின்றிலர் - (அவ்வக்ககுமாரனுக்கு) அருகில் நின்றவர்கள் எவரும்அங்கே நிற்க மாட்டாமல் அப்புறம் சென்று விட்டனர்; தனி நின்றான் -(துணையின்றி) தனித்து நின்ற அக்ககுமாரனும்; ஒரு நேமித் தேரொடும் -ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரோடும்; அவன் நேரே சென்றான் -அந்த அனுமனுக்கு எதிரே சென்றவனாகி; விழி எரி கின்றான் -(கோபத்தால்) கண்கள் நெருப்பு எரிவது போல் விளங்க; வன் திறல் அயில்வாய் அம்புகள் தெரிகின்றான் - மிக்க திறமை வாய்ந்த கூரிய முனைகளைஉடைய அம்புகளை அனுமன் மீது தேர்ந்து விடுகின்றவனானான். (31) |