5710.

கதிர்எழுந்தனைய செந் திரு முகக் கணவன்மார்
எதிர் எழுந்து,அடி விழுந்து, அழுது சோர் இள
                                   நலார்
அதி நலம் கோதைசேர் ஓதியோடு, அன்று, அவ்
                                   ஊர்
உதிரமும்தெரிகிலாது, இடை பரந்து ஒழுகியே !

     கதிர் எழுந்துஅனைய செம்திருமுகக் கணவன்மார் - சூரியன்
உதித்தது போன்ற சிவந்த அழகிய முகங்களை உடைய (இறந்த) தமது
கணவன்மார்; எதிர் எழுந்து அடி விழுந்து - முன்னே எழுந்து போய்
கால்களில் விழுந்து; அழுது சோர் இள நலார் - அழுது சோர்கின்ற இளம்
பெண்களுடைய; அதிநலம் கோதை சேர் ஒதியோடு - மிக்க அழகுள்ள
மாலையை அணிந்த கூந்தலுடனே; அன்று அவ்ஊர் உதிரமும் -
அப்பொழுது அந்த ஊரில், பெருகுகின்ற இரத்தமும்; பரந்து ஒழுகி - பரவிப்
பெருகி; இடை தெரிகிலாது - வேற்றுமை அறிய முடியாதபடி ஆயிற்று.

     இளநலார் ஓதியும்(கூந்தலும்) இரத்தமும் செந்நிறமாக இருத்தலால்
வேற்றுமை தெரியாததாயிற்று. இடை - வேற்றுமை. கோதை - மாலை. ஓதி -
மகளிர் முடி.                                             (43)